இந்தியாவில் சமீபகாலமாக ஒருபக்கம் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் நீதிமன்றங்களின் பெரும்பாலான தீர்ப்புகள் மக்களின் மனநிலையை ஒத்து அமைந்து சபாஷ் போட வைக்கிறது.  ஒரு வகையில் இது கொஞ்சம் ஆபத்தான சமாச்சாரம் என்பது தனிக்கதை. நேற்றைய 2G spectrum வழக்கின் தீர்ப்பும் நீதித்துறையின் மேலுள்ள அதிகரித்திருக்கிற நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது. இந்த வழக்கின் போக்கை திசை திருப்ப நடந்த ஏகப்பட்ட முயற்சிகளுக்கு மத்தியிலும் இந்தளவுக்கு கடுமையான தீர்ப்பு வெளிவந்திருப்பது சமானியர்களை நிஜமாகவே ஆச்சரியப்படவைத்திருக்கிறது

இன்னொரு பக்கம் இப்படி ஏற்கனவே அளித்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை ரத்து செய்து ஏலத்தில் விட்டால்/விடுவதால் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்து அது பொதுமக்களை குறிப்பாக அடித்தட்டு மக்களை நேரிடையாக பாதிக்கப்போகிறது என்கிற திசைதிருப்பலை ஒரு சாரார் மிகக்கவனமாக மேற்கொள்கிறார்கள்.. 2G ஸ்பெக்ட்ரமை பொறுத்தளவில் இலவசமாகவோ அல்லது ராசா பயன்படுத்திய First come First serve அடிப்படையில் குறைந்து விலையில் விற்பதுதான் சரி என்கிறார்கள். இணையத்திலேயே கூட நான் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் சிலர் இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். ஏலம் விடப்பட்ட 3G சேவையின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதை அவர்கள் காரணமாக தொடர்ச்சியாக முன்வைக்கிறார்கள்.

என்னைக்கேட்டால் உண்மையில் 3G சேவையைப்பற்றி இந்தியாவில் கொஞ்சம் ஓவர் ஹைப்படித்துவிட்டோம். 3Gயின் பயனாளர்கள், Video Calls & Data (Internet) சேவைகளை பயன்படுத்துவர்கள்தான். பெரும்பான்மையாக low cost basic mobileஐ பயன்படுத்தி Voice Communication (கொஞ்சம் விளையாட்டாக சொன்னால் Missed Call Services:) ) பயனாளர்கள் உள்ள நாட்டில் சமானியர்களுக்கு 3Gயின் தேவை ரொம்பக்குறைவே. இதை புரிந்துகொண்டதால்தான் தொலைபேசி சேவை நிறுவனங்கள் 3G சேவையில் Price warல் இறங்கி Customer Acquisition number gameல் இறங்கவில்லை.  அதனாலயே Voice serviceல் நடந்த மாதிரி கட்டணங்கள் வெகுவாக குறைக்கப்படவில்லை. 3Gயின் தற்போதைய அல்லது அடுத்த ஓரிரு வருடங்களுக்கு பயன்படுத்தப்போகிறவர்களுக்கு கட்டண சலுகையை விட Value added Servicesன் மிகப்பெரிய தூண்டில் என்பதை தொலைபேசி சேவை நிறுவனங்கள் புரிந்து வைத்திருக்கின்றன. அதனாலயே 7Mbps, 14 Mbps, 21 Mbps என்பதில் தொடங்கி Mobile TV, Video Calls, Video On Demand serviceகள் என சேவைகளை அதிகரித்து வருமானத்திற்கு வருமானமும் ஆச்சு, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கூட்டினபடியும் ஆச்சு என சேவை நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதுதான் 3G கொஞ்சம் Premiumஆக கட்டணம் நிர்ணயிக்க பட்டிருக்கும் காரணம். 3G அலைக்கற்றையையும் இலவசமாகவோ அல்லது சல்லிசான விலைக்கோ வழங்கியிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.

ஆனால் 2Gயின் கதையோ வேறு. ஏற்கனவே சொன்னபடி அது பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சேவை. அங்கே Customer Acquisitionதான் முக்கிய நோக்கம். அதற்கு கட்டணங்களை குறைத்தால்தான் நடக்கும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு நிமிஷத்திற்கு 8 ரூபாய் , 10 ரூபாயிலிருந்து ஒரு நொடிக்கு 1 பைசா, இரண்டு நொடிக்கு ஒரு பைசா என்கிற அளவுக்கு தரையிறங்கின. எதிர்பார்த்தபடியே பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்தது. உலக அளவிலேயே அதிக பயன்பாட்டாளர்களை கொண்ட நாடுகளில் ஒன்றானது இந்தியா. இது 2009-10ன் வரையிலான கதை. கடந்த வருடத்திலேயே Customer acquisition consolidate ஆனதை உணர்ந்து இனியும் இந்த கட்டண குறைப்புகள் பெரிய அளவில் பயன்படப்போவதில்லை என்பதை புரிந்து மெல்ல மெல்ல 20 சதவீகிதம் வரை கட்டணங்களை உயர்த்தியிருக்கின்றன.  இங்கே கட்டண உயர்வு என்பது ஏதோ பெட்ரோல் விலை உயர்வு மாதிரி ”இன்று நள்ளிரவு முதல் …”  என்று அறிவித்து செய்கிற வேலையல்ல.  மிகவும் சல்லிசாக வழங்கி வந்த திட்டங்களை மெல்ல மெல்ல நீக்குவது, சலுகைகளை குறைப்பது என பயன்பாட்டாளர்களுக்கு தெரியாமலேயே கட்டண உயர்வுகள் அமைந்துவிடுகிறது. இது ரொம்ப Cheapஆன tactic & சேவை விதிகளுக்கு புறம்பானது என்பது தனிக்கதை.

அதனால் இதுவரை கட்டணங்கள் மிகவும் குறைவாக இருந்ததற்கும், இனிமேல் கொஞ்சமாய் உங்களுக்கு தெரியாமலேக்கூட உயரப்போவதற்கும் ஸ்பெக்ட்ரம் ஏல முறையை பயன்படுத்துவதற்கும் முழுக்க சம்பந்தமில்லை.  ஒரு வகையில் தற்போதைய தொலைபேசி கட்டணங்கள் அறிமுகக்கால சலுகைகள் மாதிரிதான். அதனால் இதே கட்டணங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கமுடியாது. அதேவேளையில் கன்னாபின்னாவென்று கட்டண உயர்வு நடவடிக்கைகளிலும் சேவை நிறுவனங்கள் இறங்காது. இப்படியொரு பின்னணியில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லையென கற்பூரமெற்றி சத்தியம் செய்பவர்கள் ராசா தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு (!!!) முறையற்ற வகையில் ஒதுக்கீடு செய்ததால்தான் இந்தியாவில் தொலைபேசி புரட்சியே நடந்து குப்பனும் சுப்பனும் வாழ்வாதரத்தை உயர்த்திக்கொண்டார்கள்; இப்போது ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டால் குப்பனும் சுப்பனும் பாதிப்பார்கள் என்னும் முழுப்பூசணிக்காய் சோறு gameஐ ஆட முயற்சிக்கிறார்கள்.  இப்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் 122 ஒதுக்கீடுகள் கூட 5% குறைவான பயன்பட்டாளர்கள் பயன்படுத்துவதே. அவர்களுக்கும் 4 மாதம் கால அவகாசமிருக்கிறது. மேலும் 122 ஒதுக்கீடுகள் பெற்ற நிறுவனங்கள் அந்தந்த Circleல் இருந்து ஒருவேளை சேவைகளை நிறுத்தினால் கூட ஒன்றும் Monopoly ஏற்பட்டு விடப்போவதில்லை. தேவையான Competition அனைத்து Circleகளிலும் பின்னரும் நீடிக்கும். மொத்தத்தில் இந்த 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ரத்தோ ஏலமுறையை அறிமுகப்படுத்துவதோ பயனர்களுக்கு கட்டண ரீதியில் எந்த பாதகமுமில்லை.

ஆனால் .. கடந்த 3+ ஆண்டுகளாக தொலைத்தொடர்புத்துறையில் நடைபெற்று வரும் குளறுபடிகளால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. எந்த பெரிய முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இந்தியாவின் வளர்ச்சியின் முக்கிய காலகட்டத்தில் ஒரு முக்கிய துறையில் நடந்திருக்கும்/தொடரும் இந்த தேக்க நிலையால் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்திருக்கிறது. அதுதான் ரொம்ப சீரியஸான விஷயம். இதை யாரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லையென்பது மிகப்பெரிய சோகம். பின்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

1. “I’m back”, “நான் வந்துட்டேன்” என்று எத்தனை விதமாய் உதார் விட்டாலும் ஆசையாய்  ஆரம்பித்த இந்த தமிழ் பிளாக் அம்போவென நிற்பது மனதிற்கு என்னவோ செய்கிறது. மோட்டர் விகடனின் புண்ணியத்தில்  மாதத்திற்கு இரண்டு மூன்று கட்டுரைகள் தமிழில் எழுதினாலும் நிறைய எழுத வேண்டுமென நினைத்த விஷயங்கள் Draftலேயே கிடக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை கூட எழுதாமல் இருந்துவிட்டு  “மம்மி நான் ரொம்ப பிஸி’ என்று அலட்டுவதை குறைத்து தொடர்ந்து எழுத வேண்டும்.

2.தமிழில் எழுதுவதுதான் குறைந்து விட்டதென்றால் தமிழில் படிப்பது (இணையத்தை தவிர) சுத்தமாய் குறைந்துவிட்டது. போன முறை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் அலமாரியை அலங்கரித்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் இணையத்திற்கு அடிமையான பின்னர் ஏதோ அச்சிட்டு படிப்பது இயற்கைக்கு செய்யும் துரோகம் என்ற சமூக நல எண்ணம் வேறு லேசாய் எட்டிப்பார்க்கிறது. என்ன நடந்தாலும் சரி தூங்குவதற்கு முன்னால் அரை மணி நேரமாவது ஏதாவது ஒரு புத்தகம் படிப்பதென கங்கணம் கெட்டியிருக்கிறேன். இந்தப்பதிவை அடிக்கும் போதே மூன்றரை மணி ஆகிவிட்டதால் இன்றைக்கு மட்டும் எக்ஸ்க்யூஸ் :)

3. முடியாதென நினைக்கும், பிடிக்காத விஷயங்களை உடனேயே முகத்துக்கு நேராக சொன்னால் கோவக்காரன் என்கிறார்கள். எனக்கென்னவோ அதுதான் நேர்மையென தோன்றுகிறது. இது நேர்மையா அல்லது ஊரோடு ஒட்டி வாழாத குணமா என்னும் நீயா நானா விற்கு இன்னும் விடை கிடைக்காததால் கொஞ்ச நாளைக்கு கோவத்தை அடக்கலாம் என்று எண்ணம்

4.  2008 முழுவதும் நாலு ஊருக்கு சுற்றி அலைந்தால்தான் தமிழ்நாட்டு சட்டிக்குள்ளேயே இவ்வளவு நாள் குதிரை ஒட்டியது எவ்வளவு தப்பு என்று புரிகிறது.  அதிலும் ஹிந்தி  நஹி மாலும் ஹை கிற்கு கிடைக்கும்  லுக் ரொம்ப அசிங்கமாய் இருக்கிறது. பக்கத்து ஸ்டேட் ஆந்திரைட்டும், கேரளைட்டும் ச்சும்மா பூந்து விளையாடும்போதும், ஹம் ஆப் ஹையின் கோன் பார்த்து வளர்ந்த தமிழ்நாட்டு பார்ட்டிகள் “கிவ் மீ தோ டிக்கெட் ஹை,  தோ  பிட்சா  அவுர் தீன் கோக் ஹை “  என்று வர்மா விடும் போதும் ஏற்படும் வயிற்றெரிச்சலுக்கு நல்ல ஹிந்தி கற்றுத்தரும்  ஜெலிசில் ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும்

5. காலை டிபன் சாப்பிடுவதில் ஏற்பட்ட சோம்பல் இப்போது மதியம் லஞ்சுக்கும் நீண்டு ஃபுல் கட்டு இரவு சாப்பாடு என்பதில் வந்து நிற்கிறது. Breakfast skip பண்ணுவதே உலக மகா தப்பு என்பதை பல இடங்களில் படித்தும், பலபேர் அட்வைசித்தும் பழக்கத்தை மாற்றாமல் மதிய சாப்பாட்டையும் விட்டு லேட்நைட்டில் ஃபுல் கட்டு கட்டுவதை குறைத்தே ஆகவேண்டும் அல்லது வேளாவேலைக்கு சமைத்து தர, ஒழுங்காக நேரத்துக்கு சாப்பிடஅன்புறுத்தும் …………….  ஒரு சமையல்காரரை தேடிப்பிடிக்க வேண்டும் :)

6. ஸ்கூல் , காலேஜில் படித்த நண்பர்கள், இரண்டு மணி நேரம் ப்ராஜக்டில் டிஸ்கசன் செய்தவர்கள் எல்லாம் மறக்காமல் புது வருஷத்திற்கு, பிறந்த நாளைக்கு, பொங்கலுக்கு, தீபாவளிக்கு, வெள்ளம் வந்ததற்கு என்று வாழ்த்து/ஆறுதல் தெரிவிக்கும் போது causal மனநிலையோடோ, இல்லை network congestion எல்லாம் முடிந்த பிறகு .. என்னும் சமூக நல்லெண்ணத்தோடோ இல்லாமல் ஜோதியில் ஐக்கியமாக பழகவேண்டும். நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

7,8. நல்ல பதிவைப்படித்தால் ஜிடாக்கில் அழைத்து “கலக்கல் போஸ்ட்” என்று சொல்லி விட்டு ஒரு பின்னூட்டத்தை குறைத்து வீண் பழிக்கு ஆளாகாமல் ஒழுங்காய் பதிவுக்கே சென்று மரியாதை செய்ய பழக வேண்டும். டிவிட்டரிலும் பதில் சொல்பவர்களிடம், தேவையோ இல்லையோ குறைந்தபட்சம் ஒரு ஸ்மைலியாவது போட்டு மரியாதை கொடுக்க பழகவேண்டும். டிவிட்டர் conversation tool இல்லை, பிளாக் ..  இல்லை என்னும் Old school thoughts எல்லாவற்றையும் ஏறக்கட்டிவிட்டு நிஜமான social networkingகில் ஈடுபடவேண்டும்.

9. நடக்கவே நடக்காத உறுதிமொழிகள் கொடுப்பதை/எடுப்பதை நிறுத்தி தொலைக்க வேண்டும் .

* இன்றைக்கு ஒலிம்பிக்ஸ். ஒலிம்பிக்ஸில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று ஒலிம்பிக் சங்கத்தலைவரே சொல்லிவிட்டதால் நமக்கும் பெரிய்ய எதிர்ப்பில்லை. போன தடவை கூட பயஸும், பூபதியும் கொஞ்சம் ஆசையை காட்டினார்கள். இந்த முறை போட்டி தொடங்கும் வரை இருவரில் ஒருவர் இந்தியாவுக்கு ப்ளைட் பிடிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம். பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் சுவாரசியமான விஷயம் ஒலிம்பிக்ஸ் தொடங்கும் நாளும் நேரமும். 08/08/08 ல் சீனா நேரப்படி இரவு 8 மணி 8 நிமிடத்திற்கு தொடங்கவிருக்கிறார்கள். எட்டின் மேல் அப்படியொரு ப்ரியம். எட்டு மிக ராசியானது என்று சீனர்கள் நம்புகிறார்கள்.  எட்டை சரித்து போட்டால் Infinity வருவதால் வாழ்க்கையும் எல்லையில்லா சந்தோஷத்தை தரும் என நம்புவதால் இன்றைக்கு திருமணம் செய்ய ஏராளமானோர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். சீனா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் கூட இன்றைய தினத்தில் திருமணம் செய்ய முன்பதிவு செய்தோரின்  எண்ணிக்கை மிக அதிகம் என்கிறார்கள். இந்தியாவில் மட்டும் எட்டு ஏன் ராசியான எண்ணாக இல்லாமல் போனதென்று தெரியவில்லை. ஒருவேளை எட்டு போட்டால்தான் லைசன்ஸ் என்ற RTO புனித ஆத்மாக்களின் கெடுபிடிகள்தான் காரணமோ என்னவோ தெரியவில்லை. RTO officeல் பட்ட பாடு நினைவுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்  registration numberன் கூட்டுத்தொகை கூட எட்டு வந்துவிடாமல் இந்தியர்கள் பார்த்துக்கொள்கிறார்கள் போல :)

*பாபர் மசூதி இடிப்பு,  மும்பை குண்டுவெடிப்பு + கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு இவையெல்லாம் ஒருநாள் பரபரப்பாயிருந்து மறக்கப்பட்டாலும் அதன் விளைவுகள் இன்றும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. இயல்பான கோபம் அல்லது விரக்தியில் அரசியல் gasoline ஊற்றப்பட்டதால் இன்று வரை பலரை எரித்துக்கொண்டிருக்கிறது. இப்போது ஜம்மு காஷ்மீர் நிலவரமும் எவ்வளவு பின்விளைவுகளை தரும் என்பதை யாரும் உணர முயற்சிக்க கூடவில்லை.  வருடந்தோறும் அமர்நாத்  வரும் யாத்ரீகர்கள் தங்குவதற்காக காட்டுப்பகுதியில் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியதில் தொடங்கியது பிரச்சனை. இதனை J&Kவில் பெருவாரியாக இருக்கும் இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிகொள்பவர்கள் தங்கள் கௌரவ பிரச்சனையாக பார்த்தார்கள். காஷ்மீரில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக மக்களை உசுப்பேத்தினார்கள். முதல் இரண்டரை ஆண்டை அனுபவித்து விட்டு ஒப்பந்தப்படி ஆட்சியை கொடுத்துவிட்டு நறநறத்துக்கொண்டிருந்த முக்தி முகமதுவின் கட்சி அரசியலாக பார்த்தது. இஸ்லாமிய அமைப்புகள் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரில் வீதியில் இறங்கினார்கள். கலவரம் வெடித்தது. உடனே மதச்சாயத்துக்கு பயந்தும் வோட்டுவாங்கி பாதிப்படையாமலிருக்கவும் காங்கிரஸ் நிலம் ஒதுக்குவதை ரத்து செய்தது. ஆனாலும் ஆட்சியை காப்பாற்றமுடியவில்லை. J&K பக்கம் இன்னும் கால் ஊன்றாத பாஜக + இந்து அமைப்புகள் இதுதான் சந்தர்ப்பமென தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஜம்மு பகுதியில் களத்தில் குதித்தார்கள். சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்க அதைவிட பெரிய வன்முறையில் இறங்கிகொண்டிருக்கிறார்கள். ஜம்முவின் வழியாய் காஷ்மீருக்கு செல்லும் சரக்கு போக்குவரத்தை தடுப்பதன் மூலம் களத்தில் தாங்கள் ஜெயித்துவிடலாம் என்று பார்க்கிறார்கள். இதுதான் சாக்கு என்று ஒரு இஸ்லாமிய அமைப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்துக்கள், இஸ்லாமிய பகுதிகளை தனியாக பிரித்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். மதப்போர்வைக்குள் இருந்துகொண்டு அரசியல் அப்பாவி மக்களை ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருக்கிறது. நல்லவேளையாக பாகிஸ்தானுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது

* IBNLive ஜிடாக் மெசஞ்சர் மூலம் செய்திகளை பெறும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நீங்கள் 24 மணி நேரமும் ஜிடாக் பயன்படுத்துபவராய் இருந்தால் செய்திகளை உடனுக்குடன் தானாக தெரிந்துகொள்ள இது உதவும். செய்யவேண்டியது IM@IBNALERTS.com என்று முகவரியை ஜிடாக்கில் நண்பாரக்கிக்கொண்டு s top / s ent / s all என்று மெசேஜ் செய்துகொண்டால் போதுமானது. http://features.ibnlive.com/features/2008/faq_ibnalerts.php

* உலகத்தையே அட போட வைத்த ஐ! போன் இந்தியாவுக்கு இந்த மாதத்தில் வரவிருக்கிறது. ஏற்கனவே யூ. எஸ் போன மாமாக்கள், மச்சான்கள், குருவிகள் மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான போன்கள் இந்தியாவுக்குள் உலவினாலும் இது official release.  இந்தியாவுக்கான ஐபோன் பிரத்யோக உரிமையை ஏர்டெல்லுக்கும் , வோடபோனுக்கும் ஆப்பிள் வழங்கியிருக்கிறது. ஏர்டெல் ஆகஸ்ட் 22ல் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறது.  முன்னாள் ஹட்ச், வோடபோன் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கொண்டுவருமென நினைக்கிறேன். இரண்டு பேருமே போட்டி காரணமாக விலையை பரமரகசியமாக வைத்திருக்கிறார்கள். 8GB மாடல் 12,000க்குள்ளும், 16GB மாடல் 18,000க்குள்ளும் இருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு. இன்னும் 3G சேவைக்கான spectrum allocationனே முடிந்தபாடில்லாததால் ஐபோனின் சமீபத்திய 3G போன்கள் வாங்கிகொண்டாலும் நாம் 3Gஐ உபயோகப்படுத்த முடியாது. 2 மெகாபிக்சல் கேமராதான். இந்தியன் செல்போன் ஸ்டான்டர்டான FM radio இருப்பதாக தெரியவில்லை. ஐபோன் விலைக்கு வேறு எத்தனையோ நல்ல போன்களை வாங்கிவிடலாம். ஆனால் எல்லோரையும் இழுக்கும் விஷயம் . அழகு , வடிவமைப்பு ..

*  என்னுடைய பதிவுகளில் முஷாரப் என்று தேடினால் நிறைய இடுகைகள் வருகிறது. முஷாரப் குறித்து அதிகம் பேசும்போதெல்லாம் உடனே எழுதியிருக்கிறேன். முஷாரப் தவிர ஹிட்லர் முசோலினி போன்றவர்களை எவ்வளவுதான் நாம் வெறுத்தாலும் உள்ளுக்குள்ளே அவர்களை பற்றிய ஒரு சின்ன பிரமிப்பு இருப்பதை நிறைய பேர்களிடம் இருப்பதையும் காணமுடிகிறது.  இவர்களின் சர்வாதிகாரத்தை வெறுத்தாலும் தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் ஆளுமைத்திறன் நம்மை பாதித்திருக்கிறது. சரி சொல்லவந்தது முஷாரப் பற்றி … முஷாரப் சீனா பயணத்தை ரத்து செய்திருக்கிறார். நவாஸ் ஷெரிப் பிரதமராய் வெளிநாட்டுப்பயணம் செய்த போது் முஷாரப் ராணுவத்தின் மூலம் ஆட்சியை பிடித்தது ஞாபகத்திற்கு வந்திருக்கலாம். இப்போது நவாஸிடம் பாகிஸ்தானின் அரசாங்கத்தின் கடிவாளமிருக்கிறது. நவாஸும் சர்தாரியும் முஷாரப்பை வீட்டுக்கு அனுப்ப ஒப்பந்தமிட்டுவிட்டார்கள் என்று செய்தி சேனல்கள் இன்று பரபரத்துகொண்டிருந்தன. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அது உண்மையாகவும் மாறலாம். முஷாரப்புக்கும் வேறு வழியில்லை. என்னைக்கேட்டால் நாடுகடத்தப்பட்டால் நிம்மதியாக இருப்பார். இல்லையென்றால் திடுமென ஒருநாள் பாகிஸ்தான் ராணுவத்தில் ஒருவர் அவரின் கடைசி பக்கங்களை எழுதி முடிப்பார்.

* கொஞ்சம் ரூம்போட்டு யோசித்தால் நம்மில் ஒவ்வொருவருமே இந்த இரண்டு  பிரிவுகளில் ஏதாவது ஒன்றில்தான் இருப்போம் என்று தோன்றுகிறது. 1. காற்றின் திசையில் எந்த சலனமும் இல்லாமல் போகிறவர்கள் 2. காற்றின் திசையை எதிர்த்தவர்கள் + காற்றின் திசையில் வேகத்தை அதிகரித்தவர்கள். இந்த முதல்பிரிவில் முக்கால்வாசிக்கும் மேல் வாழ்ந்து டிஜிட்டல் பிரிண்டாகி போனவர்கள். இரண்டாவது வகையறாதான் வெற்றி பெற்றவர்கள், வெற்றியை அடைய இயலாதவர்கள் அல்லது தோல்வியடைந்தவர்கள். காற்றின் திசையை எதிர்த்து முன்னேற முடிந்தவர்களும் காற்றின் வேகத்தை பயன்படுத்தி சூபர்சோனிக்கில் பறந்தவர்கள் வெற்றி பெற்றவர்களாகிறார்கள். இரண்டிலும் தாக்கு பிடிக்க முடியாமல் காணாமல் போனவர்கள் தோல்வியடைந்தவர்கள் ஆகிறார்கள். வெற்றி பெற்றவர்கள்/ தோல்வியடைந்தவர்கள் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சில பக்கங்களிலோ சில வரிகளிலோ எழுதி முடித்து விட முடிந்தாலும் நிஜம் இரண்டு பேருக்குமே மிக பயங்கரமானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் சிகரமோ பள்ளதாக்கோதான் .. ஒவ்வொரு அடிக்கும் வரும் இந்த பயத்தை தொலைப்பதிலோ அல்லது பயத்தினால் வெகு கவனமாய் செயல்படுவதிலோதான் வெற்றியின் சூட்சமம் இருக்கிறது.  ஸ்ஸப்பா !!!  எழுதி முடிப்பதற்குள் ரூம் மேட் கத்தி கொண்டிருக்கிறான்… தள்ளி நில்லு ! காத்து வரட்டும் !

கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்
என்னை கட்டியிழுத்தாய் இழுத்தாய்

போதாதென சின்னசிரிப்பில் ஒரு கள்ளசிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பிறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை

(பி.கு:) இந்த பாட்டை பாராட்டி ரெண்டு வரி எழுதலைனா தமிழ் சினிமா ரசிகர் கூட்டத்திலேயே சேர்த்துக்க மாட்டங்ககிற ஆபத்திருப்பதால் பாட்டை மட்டுமே பாராட்டி இந்தப்பதிவு ;)

Indian Political League (IPL)

Archived in the category: அரசியல்
Posted by vicky on 22 Jul 08 - 0 Comments

இன்றைக்கு இந்தியன் பொலிட்டிக்கல் லீக்கின் பைனல். கிரிக்கெட் பிரிமீயர் லீக்கிற்கும் பொலிட்டிக்கல் லீக்கிற்கும்  ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது. உண்மையைச்சொன்னால் எனக்கு கிரிக்கெட்டை விட பொலிட்டிக்கல் லீக் ரொம்ப சுவாரசியமாக இருப்பதாகவே தோன்றுகிறது. கிரிக்கெட் போல இரண்டு அணிகள்தான் பைனலில் ஆடமுடியும் என்றில்லாமல் இங்கே மூன்று அணிகள் மோதவும் சான்ஸ் தந்திருக்கிறார்கள் திருவாளர் பொதுஜனங்கள். ஆளும் UPAவிற்கு 271 வோட்டு என்ற டார்கெட். NPAவிற்கும் UNPAவிற்கும் UPAவை 271ஐ எடுக்கவிடாமல் செய்தாலே வெற்றி. அனில் அம்பானியும் வெளியே சொல்லப்படாத அமெரிக்க கம்பெனிகளும் UPAவின் franchise உரிமையை எடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள். எதிரணிகளுக்கு முகேஷ் அம்பானிதான் franchiseஆக இருக்கலாம் என்று ஆட்டத்தை வேடிக்கைபார்க்கிறவர்கள் முணுமுணுக்கிறார்கள்.  திமுக,  ராஷ்ட்ரிய ஜனதாதள் போன்ற கட்சிகளுக்கு Icon Status வழங்கப்பட்டு  அவர்கள் கேட்டது கிடைக்கும் என்னும் உறுதிமொழியும் அளிக்கப்பட்டுவிட்டது. கிரிக்கெட் போல இங்கே வீரர்களை ஏலமெடுப்பதில் எந்த slabம் கிடையாது என்பதால் மற்ற வீரர்களுக்கு/சிறு அணிகளுக்கு அவர்களின் பேரம் பேசும் திறத்திற்கேற்ப வெகுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. உத்திரபிரதேசத்தின் ஜான்சிராணியை அடுத்து உலகக்கோப்பையின் கேப்டன் என்று இப்போதே அவர் சார்ந்த அணி அறிவித்திருப்பது சுவாரசியத்தின் உச்சம்.

கொஞ்சம் விளையாட்டாக எழுதினாலும் மேலே சொன்ன மாதிரிதான் கடந்த ஒரு வாரத்தில் இந்திய அரசியல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. பல கட்சிகள் சிதறியிருக்கிறது.  பாராளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே , அணி மாறினால் நல்ல வெகுமதி என்று தனக்கு வந்த SMS Campaignஐ காட்டுகிறார் ஒரு உறுப்பினர். கட்சியின் கொறாடா உத்தரவை மீறி வோட்டளித்தால் எம்பி பதவி பறிபோகும் என்பதால் அதற்கும் சேர்த்து விலை கேட்டுவாங்கியிருக்கிறார்கள் பல உறுப்பினர்கள். 6 எம்பிக்களை வைத்துக்கொண்டு ஒரு கேபினட், துணை அமைச்சர், துணை முதல்வர் பதவி என்று பேரம் பேசி வெற்றிகரமாக  பேரத்தை முடித்த திருப்தியில் தீர்மான விவாதம் நடந்துகொண்டிருக்கும் போது நிம்மதியாக தூங்குகிறார் ஒரு முன்னாள் மந்திரி.  பேரம் படியாமல் எதிர்த்து வாக்களிக்க போவதாக முடிவு செய்துவிட்டு அக்கூட்டணியுடன் லஞ்ச் சாப்பிட்ட கைகள் காயுமுன்னரே ஆளுங்கூட்டணியுடன் டின்னருக்கும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் கௌடாக்களும், அஜித் சிங்குகளும்.  இது போன்ற அரசியல் பல்டிகளும் அசிங்கங்களும் புதிதில்லை என்றாலும் 24 x 7 மீடியாவின் வெளிச்சத்தில் முதல் முறையாக பார்க்கும் போது குமட்டலாய் இருக்கிறது.

மதவாத பாஜக எவ்வளவோ ஆபத்தனதோ அதே அளவுக்கு ஆபத்தானவர்கள் போலி மதச்சார்பின்மை பேசும் மற்ற அரசியல் கட்சிகள். அணு ஒப்பந்ததிற்கு எதிர்ப்பு என்றால் மக்களிடம் எந்தளவுக்கு ரீச் இருக்குமோ என்று பயந்து அமெரிக்காவிற்கும் இஸ்லாத்திற்கும் முடிச்சு போடுகிறார்கள். இந்தியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் அமெரிக்கா இரானை தாக்காமல் இருக்கும் என்ற உறுதிமொழியை வாங்கமுடியுமா என்று கேட்கிறார் வருங்கால பிரதமர் ஒருவர். அமெரிக்க ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்தால் தங்கள் வோட்டு வங்கி பாதிக்காமலிருக்க சமாஜ்வாதி அப்துல்கலாமிடம் விளக்கம் கேட்ட பிறகே ஆதரவை அறிவிக்கிறார்கள். மதம் சார்ந்த ஒட்டு வங்கி என்பதைத்தவிர பிஸினஸ் சார்ந்த விவாகரங்களையும் எழுதினால் இந்த பதிவு தனிப்புத்தகம் போடும் அளவுக்கு பெரிதாகிவிடும் என்பதால் பிறிதொரு சமயம் தனியாக எழுத முயற்சிக்கிறேன்.

சரி .. இப்போதைய நிலைமைப்படி மன்மோகன் அரசு தப்பித்து விடும் அல்லது நிச்சயமாய் வெற்றி பெற்றுவிடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.  கடைசி ஓவரில் தூஷ்ராவோ கூக்ளியோ வீசப்பட்டு அதிர்ச்சியளித்தாழொளிய  அரசு கவிழ வாய்ப்பில்லை. ஆனால் இது போன்ற ஒரு கூட்டணி அவியலோடு எத்தனை நாள் தாக்குபிடிக்க முடியும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.  என்னைக்கேட்டால் கூட்டணிக்கு காம்ரேடுகள் மற்ற கட்சியினரை ஒப்பிடும்போது மிகவும் உகந்தவர்கள். அமெரிக்கா, பாஜக இந்த இரண்டு ஒவ்வாமை மட்டும்தான் அவர்களுக்கு உள்ள பிரச்சனை. மற்ற எந்த தலைபோகிற பிரச்சனை வந்தாலும் மாநில மாவட்ட தலைநகரங்களில் சிகப்பு கலரில் போஸ்டர் அடித்து கூட்டம் போட்டதோடு திருப்தியடைந்து விடுவார்கள். ஆனால் மற்ற மாநில/சிறு கட்சிகள் மிகவும் ஆபத்தானவர்கள். எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவையும்  அனுபவிக்க நினைப்பவர்கள். அவ்வளவையும் அனுபவித்திவிட்டு அடுத்த தேர்தலில் ஆபத்து வருமென்று தெரிந்தால் பிரதமர் குட்நைட் சொல்லவில்லை போன்ற அதிமுக்கிய விஷயங்களை எல்லாம் காரணம் காட்டி குட் பை சொல்லிவிட்டு எதிர்கூட்டணியில் துண்டு போட்டுவிடுபவர்கள். இன்றைய நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தில் வெற்றி பெற்றாலும்  , பொருளாதார தடுமாற்றம், பெட்ரோலிய  பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் திடமான சில முடிவுகளை எடுத்துதான் ஆகவேண்டும் என்ற சூழலில் டிசம்பர் வரை இந்த ஆட்சி தாக்குபிடித்தால் …

உலக அளவில் உள்ள பொருளாதார தடுமாற்றங்கள் வளரும் நாடு என்பதால் இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. முக்கியமாய் பெட்ரோலிய பொருட்களின் விலை இன்னும் உயரும் வாய்ப்பிருப்பதால் திடமான முடிவுகளை எடுக்க வேண்டிய சமயம் இது. இந்த சூழல் இந்தியாவின் தேர்தல் ஆண்டை ஒட்டி வந்தது நமது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.  திடமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு தலைவரும், அதற்குரிய அரசியல் சூழலும்தான் இப்போதைய தேவை. ஆனால் இருக்கக்கூடிய அரசியல் சூழலில் தேர்தல் வந்தாலும் இதே போன்றதொரு ஒரு குழப்ப அரசியல் கூட்டணிதான் அமையும் வாய்ப்பிருக்கிறது. திறமாய் வழிநடத்தி செல்லும் தலைவர் ஒருவரும் எந்தக்கட்சியிலும் இருப்பதற்கான அறிகுறிகூட இல்லை என்பதும் துரதிர்ஷ்ட வசமான உண்மை. அதனால் அடிக்கிற சூறாவளியில் அம்மி பறந்தால் என்ன ஆட்டுரல் பறந்தால் என்ன என்று கவலையை விட்டு நடக்கும் கூத்துக்களை கைதட்டி சந்தோஷமாய் பார்ப்பது ஜெலுசில்களின் எண்ணிக்கையை குறைக்கும்

[Video] Terrific T.R

Archived in the category: Video, நகைச்சுவை
Posted by vicky on 18 Jun 08 - 2 Comments

சிரிச்சு சிரிச்சு …. முடியலை :)

கொசுறு track ;)

Dasavatharam: Movie Review

Archived in the category: சினிமா, தமிழ்
Posted by vicky on 14 Jun 08 - 0 Comments

வி.மு 1: தடாலடியாய் திருநெல்வேலிக்கே செல்பேசி டிக்கெட் புக் செய்து கொடுத்த கௌதமுக்கு நன்னி நன்னி நன்னி :)

வி.மு2: சிவாஜி குறித்த என் விமர்சனத்தை படித்து விட்டு இந்த விமர்சனத்தோடு ஒப்பிடுபவர்களுக்கு – ஆந்திர மெஸ்ஸிலேயும் ரத்னா கபேயிலும் எதிர்ப்பார்க்கிறது வேற ;)

வி.மு3: No Spolier என்று சொல்லும் விமர்சனங்களை நம்ப வேண்டாம். அவ்வளவு ஈஸியாக கதையை சொல்லிவிட முடியாது. ;)

இனி pluses and minuses மட்டும் …

+++ கமல் – ஒவ்வொரு புதிய பாத்திரம் அறிமுகம் ஆகும்போதும் இது கமலாக இருக்குமோ என்று யோசிக்க வைத்த உழைப்பு.

- பத்து என்ற எண்ணிக்கைக்காகவே படத்தின் வேகத்தை குறைக்கும் தேவையில்லாத க(மல்)தாபாத்திரங்கள்

+ 12ம் நூற்றாண்டு, சைவம், வைணவம், நாசா, Bioweapons, திருட்டு, ஜார்ஜ் புஷ், இந்தியா, Chasing .. ஏகப்பட்ட கொட்டாவி , unofficial தம் பிரேக்குக்கு நடுவிலும் ரசிக்க வைத்த, ஆச்சரியப்படுத்திய first half

நாசாவிலிருந்து திருடு போகும் உலகையை அழிக்கவல்ல weapon, ஜார்ஜ் புஷ்ஷின் கவனத்திற்கு போய் மன்மோகன் சிங்குடன் பேசும்வரை போன ஒரு விஷயம் .. காமெடியாய் பல்ராம் நாயுடு துப்பு துலக்க, அசின் teddy bearஐ போல பெருமாள் சிலை + Voilஐ கையில் அணைத்துக்கொண்டு திரிய, bioweaponsன் விளைவை அறிந்த கமல் அசினை துரத்துவதும், வில்லன் Fletcherஆல் துரத்தப்படுவதையுமே திருப்தியாய் நினைப்பது ..

++ உலகை bioweapon அழிக்க வந்த நொடியில் விசுவரூபம் எடுத்து உலகை காத்த சுனாமி பேரலை .. Alternative thinkingன் உச்சம்

+ நச் வசனங்கள் (உதா: கடவுள் இல்லைனு சொல்லல; இருந்திருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன் )

- தேவையில்லாத டபுள் மீனிங் வசனங்கள் :( + ஆங்கில, மலையாளத்தமிழ், தெலுங்குதமிழ், உருது தமிழ், பஞ்சாபித்தமிழ் வசனங்கள்

+ முகுந்தா முகுந்தா , உலகநாயகனே , ஓ ஓ சனம் ஓ சனம்

+ அந்த கேமராவுக்கும், Grapahics teamக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கப்பா

- ஆவ்வ்வ்வ்வ் … எங்கேப்பா எடிட்டர் ??

+ கடைசியில் வரும் உலக நாயகனே பாட்டும், கமல் மேக்கப் ரகசியங்களும் .. நிறைய Standing Ovation :)

மொத்தத்தில் படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது. அதுவே மிகச்சிறந்த படம் என்று ஒத்துக்கொள்ள போதுமானதாக இல்லாதது சோகம்.

வி.பி: இந்த பட(மு)ம் பத்து வருஷத்துக்கு அப்புறமா வந்தா நீ ரசிப்பேனு சொன்னா, புத்திசாலித்தன குறைபாடு என்னோட குறை கிடையாது :)

மற்ற விமர்சனங்கள்:

1. Dasavatharam Rediff review

2. பினாத்தல் சுரேஷ்

3. தசாவதாரம் – மனதை கவர்ந்த பூவராகவன்

4. தசாவதாரம் விமர்சனம்(without spoilers)

5. தசாவதாரமும் கமலின் சாபமும்

6.தசாவதாரம் EXCLISIVE : கேள்விகளும், பாராட்டுகளும்

7.கண்டேன் தசாவதாரத்தை !!

8.Dasavathaaram – Random walk

* சென்னை சேப்பாக்கத்தில் வழக்கமாய் வருண பகவானின் அருளாசியோடு மழை பெய்து ரிசல்ட் இல்லாமல் போகும். இந்த முறை இரு அணிகளின் பேட்ஸ்மென்களின் ரன் மழையால் ரிசல்ட்லில்லாமல் போனது. கடைசி இரண்டு நாட்களிலாவது பந்து வீச்சாளர்களுக்கு (ஸ்பின்னர்களுக்கு) கைகொடுக்கும் இந்திய ஆடுகளங்கள் போலல்லாது கடைசி நாள் வரை ஆடுகளத்தில் சுத்தமாய் உயிரில்லாமல் போனது சென்னை ரசிகர்களின் துரதிர்ஷ்டம்.

* மூன்றாவது நாள் ஆட்டத்தை பார்த்த ரசிகர்களுக்கு கொடுத்த காசுக்கு அதிகமாகவே சேவாக் விருந்து வைத்திருந்தார். மற்ற நாட்களில், அதுவும் கடைசி நாள், ஆட்டத்தை பார்த்தவர்கள் எல்லாம் ,என்னையும் சேர்த்து, மிகப்பெரிய பாவத்மாக்கள்

* என்றைக்குமே இல்லாத கடமை உணர்ச்சி அதிகமாய் தோன்றி மூன்றாவது நாள், வெள்ளிக்கிழமை என்னை அலுவலகத்திற்கு தள்ளி விட்டிருந்தாலும், தலைவர், சச்சின், இறங்கியவுடன் சேப்பாக்கிற்கு பறந்து விட வேண்டியதுதான் என்று கிரிகின்போவை ஐந்து நொடிக்கொரு முறை F5 செய்து கொண்டிருந்தால் சேவாக் – ஜாபர்/டிராவிட் ஜோடி பலமான அடித்தளமிட்டு கொண்டிருந்தது. மறுநாள் நள்ளிரவு 7.30 மணிக்கெல்லாம் எழுந்து அவசரமாய் ஓடினால் 10 நிமிடத்தில் சேவாக் அவுட். சேவாக் உலக சாதனையை மிஸ் செய்த சோகத்தை கூட கண்டு கொள்ளாமல் அடுத்து இறங்கிய சச்சினுக்கு மைதானமே அலற கைதட்டினால், கைதட்டல் சத்தம் அடங்குமுன் டக் அடித்து வெளியேறியிருந்தார். சோகத்திற்கு டாஸ்மாக்குகள் எல்லாம் பத்தாது :(

* நான்காவது நாளில் இந்திய அணியின் Game plan சுத்தமாய் புரியவில்லை. 468/1 என்னும் நிலையில் பந்து வீச்சாளர்கள் எல்லாம் வெறுத்து போய் பந்து வீசும் நிலையில் 250 – 300 ரன்களை அதிரடியாய் அடித்து எதிரணிக்கு பிரஷர் கொடுப்பதே பெரும்பாலும் நடக்கும். மாறாக 200 ரன்களை ஒரு நோக்கமே இல்லாமல் தடவி தடவி அடித்தது, ஆஸ்திரேலிவாகுவதற்கு இன்னும் நிறைய நாளிருக்கிறது என்று சொல்வது போல் இருந்தது.

* லக்ஷ்மணன் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதில் எனக்கும் சந்தேகம் கிடையாது. ஆனால் அவர் sensible ஆட்டக்காரர் கிடையாது என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். ஒருகட்டத்தில் தோனியும் வெளியேறிவிட, தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெய்ன் மிக நேர்த்தியாக பந்து வீசத்தொடங்க, முதல் பந்திலேயே சிங்கிள் எடுத்து கும்ளே, ஹர்பஜன், ஆர் பி ஆகியோருக்கு ஆட விட்டார். விளைவு மூன்று பேரும் அடுத்தடுத்து க்ளீன் போல்ட். உண்மையிலே அந்த மூன்று போல்டுகளின் பந்து வீச்சும் விஷுவல் ட்ரீட் என்றுதான் சொல்லவேண்டும்.

* அடுத்தது சாந்த(!!!!)குமாரன் ஸ்ரீசந்த். ஆக்ரோஷமாய் இருந்தால்தான் வேகப்பந்து வீச்சாளர் என்று யாரோ தவறாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். 5 ஓவருக்கு ஒரு நல்ல பந்தை வீசிவிட்டு எதிரணி பேட்ஸ்மென்களிடம் முறைத்துகொண்டிருப்பதெல்லாம் தவுசண்ட் மச். நேற்றைக்கு ஸ்மித் பவுண்டரியாய் விளாசித்தள்ள ஒரே ஒரு நல்ல பாலை போட்டுவிட்டு அவரிடம் வலியச்சென்று முறைப்பதெல்லாம் நமக்கே தாங்கமுடிய மாட்டென்கிறது. வெட்டி சீன் மட்டும் வேலைக்கு ஆகாது என்று யாராவது சொல்லிதந்தால் தேவலை.

ஹும்ம்ம்ம்ம் நிறைய சோகத்தை எழுதிட்டேன்னு நினைக்கிறேன் .. கொஞ்சம் ஜாலியாய் ..

* சேவாக் மாதிரி அதிரடியான ,தனக்கென மனக்கட்டுப்பாடெல்லாம் இல்லாத பேட்ஸ்மேனால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாது என்று என் வாதத்தை மீண்டும் மீண்டும் பொய்யாக்கி வருகிறார். அதுவும் 100, 200, 300 ஐ நெருங்கும் வேளையில் கூட சிக்ஸருக்கு பந்தை விரட்டுவது தில் மா ..

* டிராவிட்டின் 10,000 + 25வது செஞ்சுரியை ஹைலைட்சில் பார்த்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நேரில் கொஞ்சம் நெளிய வைக்கும் வேகம் என்றாலும் அவரின் ஷாட் செலக்ஷன்களை காண கண் கோடி வேண்டும்.

* தாதா அவர் ஸ்டைலில் நான்கு போர்களை அடித்தாலும் ஹாரிஸின் பந்துவீச்சில் வழக்கமான ஸ்டைலில் ஒரு சிக்ஸர் அடித்திருக்கலாம்.

* சனிக்கிழமை கூட மைதானம் நிரம்பாதது ஆச்சரியம். கென்யா – ஜிம்பாப்வே மேட்ச் என்றால் கூட புல் ஹவுஸ் ஆகிவிடும் சென்னையில் என்பதால் பெரிய ஆச்சரியம்.

* அதிகபட்சமாய் பத்து பெண்களே வந்திருந்தபோதும் ரசிகர்களை காட்டியபோதெல்லாம் பெண்களை மட்டுமே காண்பித்த கேமராமேன்களுக்கு …. . பத்தனன்களின் சாபம் நிச்சயம் பலிக்குமாம் !!!

* 200 ரூபாய் டிக்கெட்காரர்களுக்கு TNCA பாவம் பார்த்து Cement slabன் மேல் கட்டைகளை பரப்பியிருந்தார்கள். இல்லையென்றால் அடித்து வெயிலுக்கு ..

* ரசிகர்களை கேட்டால் நிடினிக்குதான் மேன் ஆப் தி மேட்ச் கொடுத்திருப்பார்கள். பவுண்டரியின் அருகில் பீல்டிங் செய்த போதெல்லாம் டான்ஸ் ஆடி, சல்யூட் அடித்து … என ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். அதுவும் ஆட்டம் முடிந்தவுடன் dressing roomலிருந்து மெனக்கெட்டு வந்து வேலிக்கு இந்தப் பக்கம் சிறை வைக்கப்பட்டிருந்த அப்பாவி ரசிகர்களுக்கு கைகொடுத்து, ஆட்டோகிராபிட்டு, சகஜமாக பேசி தெய்வ மச்சனாகிவிட்டார். இந்திய வீரர்களில் சேவாக்கும், ஹர்பஜனும் டாப். அதுவும் ஆஸி டூருக்கு பின்னர் , இப்படியொரு ரசிகர்களுக்கு அருகில் பீல்டிங்கிற்காக நிற்பதை மிகவும் ரசித்திருப்பார்.

indian_cricketers.jpg

தலைவர் மட்டும் மானத்தை காப்பாற்றியிருக்கிறார். ஜில்பான்சாக இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே :)